தி.மு.க.ஆட்சியால் பெண்கள் சந்தோசம்

எழுதியவர் -
Guruji

 தி.மு.க. அரசின் செயல்பாடு பெண்களை மகிழ்விப்பதாக து.முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளது பற்றி...?

   முன் எப்போதையும் விட இப்போது தமிழகப் பெண்மணிகள் மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறார்கள் ரேசன் அரிசி ஒரு ரூபாய்க்கு கிடைத்தாலும் வெளிச்சந்தையில் ரூ.25 க்கு மேல்தான் கிடக்கிறது

  வெண்டைக்காய் 90 ரூபாய் உருளைக்கிழங்கு 40 ரூபாய் கத்தரிக்காய் 80 ரூபாய் வெங்காயம் 100 ருபாய் என மிக மலிவு விலையில் உள்ளது

   எரிவாய்வு சிலிண்டர் அதிகமில்லை 400 ரூபாய்தான் மண்ணெண்னை வெளிச்சந்தையில் லிட்டர் 30 ரூபாய் மட்டுமே


  தினசரி குழாயில் தவறாமல் காற்று வருகிறது கரண்ட் கட்டே ஆவதில்லை பஸ் பயணக்கட்டணம் குழந்தைகளின் கல்விக்கட்டணம் மின்சாரக்கட்டணம் எல்லாமே மிகக் குறைவுதான்

  தெருவில் பாதுகாப்பு குறைபாடே இல்லை வழிப்பறி திருட்டு என்ற பேச்சிக்கே இடமில்லை இதையெல்லாம் விட மேலாக தமிழ் நாடுமுழுக்க தோண்டி துழாவி தேடினாலும் குடிகாரர்களை மாதிரிக்கு கூட பார்க்க முடிவதில்லை

  பிராண்டி விஸ்கி நாற்றமே தெருவில் கிடையாது மொத்தத்தில் காந்தி கனவு கண்ட ராமராஜ்யம்தான் இங்கு நடக்கிறது

  அப்புறம் என்ன பெண்களின் சந்தோஷப்படாமல் துக்கமா படுவார்கள்

source http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_29.html