அன்று அண்ணாவுக்குத் துரோகம் செய்தார் ஈ.வி.கே. சம்பத். இன்று எங்கேயோ காசு வாங்கிக் கொண்டு திமுக கூட்டணிக்குத் துரோகம் விளைவித்து வருகிறார் அவரது மகன் இளங்கோவன். இனியும் இளங்கோவன் உளறுவதை பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று கடும் எச்சரிக்கை விடுத்து திமுக சார்பில் வீரபாண்டி ஆறுமுகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்

சொல்லின் செல்வர் சம்பத்தை குறை சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும் அந்த தகுதியும் தராதரமும் நிச்சயம் வீரப்பாண்டி ஆறுமுகத்திற்கு இல்லை




  சம்பத் அவர்கள் தி.மு.க.வை வளரச் செய்த தலைவர்களில் மிகமுக்கியமானவர் அண்ணாவிற்கு இனையான செல்வாக்கை தொண்டர்களிடம் பெற்றவர்

   தனது இரக்க குணத்தாலும் விட்டுக் கொடுக்கும் தன்மையாலும் அண்ணாவை வளரவும் தலைமையில் தொடரவும் வழி செய்தவர்

  ஆரம்பக்கால தி.மு.க. பதவியை பிடிப்பதற்கு தங்களது உழைப்பை முழுமையாக கொடுத்தவர்கள் நாவலர் நெடுஞ்செழியன் மதியழகன் ஈ.வி.கே. சம்பத் என்பதை வரலாறு இன்னும் மறக்க வில்லை

 வீரப்பாண்டியாரின் பேச்சு தி.மு.க எப்போதுமே நன்றியுணர்வுக்கு அப்பாற்பட்டது என்பதைத்தான் உணர்த்துகிறது

source http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_28.html